திருப்பரங்குன்றம் செல்கிறார் பிரதமர் மோடி..!!

 
modi

வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை முன்னிட்டு கோவில் வாசலில் இருந்து கருவறை வரையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர். கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தார்.