கோயம்பேடு சந்தையில் பூ, பழங்களின் விலை கிடுகிடு உயர்வு!

 
tn

விநாயகர் சதுர்த்தி , ஓணம் பண்டிகை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

tn
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் சிறப்பு  சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று ,விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

tn

 காய்கறி பழங்கள் வரத்து போதுமான அளவில் இருப்பதால் விலையேற்றம் பெரிய அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.  இருப்பினும் பூக்கள் விலை என்பது உயர்ந்தை காணப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி , ஓணம் பண்டிகை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ. 500க்கும் , சம்பங்கி கிலோ ரூ. 150க்கும் , ரோஜா கிலோ ரூ. 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.