சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிபதிக்கு அழுத்தம்- சிபிஐ விசாரணை கோரி மனு

 
savukku

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த அந்த அதிகாரமிக்கவர்கள் யார்? என சிபிஐ விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை  இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் கடந்த 5 ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக  வழக்குப்பதியப்பட்டுள்ளது. கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை  சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து  உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அப்போது பாலாஜி,  நீதிபதி சுவாமிநாதன், ‘இந்த விவகாரத்தில் அதிகாரமிக்க இரு நபர் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசி அழுத்தம் கொடுத்தார்கள். அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவர் என்பதால், அட்வகேட் ஜெனரல் வழக்கை ஒத்திவைக்க கோரியபோதும் அவசரமாக இறுதி விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துக் கொள்ளப்பட்டது’ என்றார். நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 


இந்நிலையில் சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.