லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

 
death

சென்னை அடுத்த அயனாவரத்தில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைக்கோலார் தெரு பகுதியை சேர்ந்தவர் சரனிதா (32). இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு உதயகுமார் என்பவருடன் திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் உதயகுமார் கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சரனிதா எம்.டி மருத்துவ படிப்பு இறுதி ஆண்டை முடித்துவிட்டு பயிற்சிக்காக சென்னை வந்த நிலையில், அயனாவரத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கணவர் உதயகுமார் போன் செய்ததாகவும், போன் எடுக்காததால் தனியார் விடுதியின் அலுவலகத்திற்கு போன் செய்து சரனிதாவை சென்று பார்க்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து ஹவுஸ் கீப்பிங் பணியை மேற்கொள்ளும் கமலா என்பவர் சென்று பார்த்தபோது அவர் எந்தவித அசைவும் இன்றி படுத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயனாவரம் போலீசார் சரனிதா உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, உடலை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாரணிதா நேற்று காலை பணி புரிவதற்காக லேப்டாப் எடுத்த போது அதில் சார்ஜ் குறைவாக இருந்ததால், லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் சார்ஜர் வயரை கையில் பிடித்தவாரே தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.