டிரம்ப் உத்தரவால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாப் பாடகி!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்து பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை 956 பேரை கைது செய்துள்ளது.
அவர்களில், கடந்த சனிக்கிழமை 286 பேரும், வெள்ளிக்கிழமை 593 பேரும், வியாழக்கிழமை 538 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில், 1.5 மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர். ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மெக்சிகன் பெற்றோருக்குப் பிறந்து 1970களில் அமெரிக்காவிற்கு அகதிகளாக நுழைந்த நடிகையும் பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் (32), இன்ஸ்டாகிராமில், ‘நான் மிகவும் வருந்துகிறேன்... நம் நாட்டு மக்கள் அனைவரும் (மெக்சிகோ) தாக்கப்படுகிறார்கள்; குழந்தைகள் கூட காப்பாற்றப்படவில்லை.
எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்; ஆனால் என்னால் முடியாது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது செய்ய எல்லா வழிகளிலும் முயற்சிப்பேன்; நான் ஏதாவது செய்வேன் என்று சத்தியம் செய்கிறேன். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் மக்களை வெளிப்படையாக ஒடுக்குவது சரியல்ல,’ என்று அவர் கண்ணீர் மல்க வீடியோவில் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகளுக்காக நடிகை செலினா கோம்ஸ் பல்வேறு வழிகளில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Selena gomez crying over laken Rileys gruesome murder 😳
— 10% 4big guy (@Steven58017514) January 27, 2025
Oooops my bad she crying over the ms13 gangs being deported. pic.twitter.com/xGeP9EGvBS