மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பூரணம் அம்மாள்!

 
tn

ஆயி என்ற பூரணம் அம்மாள் மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.

மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கினார். கொடிக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி,  1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தான் படித்த பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொருட்டு, கட்டிடங்கள் கட்டுவதற்காக தனது மகள் ஜனனி என்பாரின் நினைவாக தானமாக வழங்கினார். குடியரசு தினத்தையொட்டி பள்ளிக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அரசு பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாள் முதலமைச்சரிடம் விருது பெற்றார்.

tn

இந்த நிலையில், ஆயி என்ற பூரணம் அம்மாள் மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ₹3.5 கோடி மதிப்புள்ள 91 சென்ட் நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
ஏற்கனவே ₹7 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை பள்ளிக்கு வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் ₹3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.