“வாயை மூடிக்கிட்டிரு” மூதாட்டியை மிரட்டிய அமைச்சர் பொன்முடி

 
ponmudi

திருக்கோவிலூரில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், இதுகுறித்த அறிவிப்பு வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட அறிவிப்பு வெளியாகலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

ponmudi

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை திறந்து வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான  பொன்முடி, பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி வளர்ச்சி அடைந்து வருகிறது, என பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர், எங்கள் பகுதியில் நிறைய குறைகள் இருக்கின்றன என தெரிவித்தார். 

உடனே கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரை கேலி செய்த பொன்முடி, “வாயை மூடிக்கிட்டிரு” எனக் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணிடம், உன் வூட்டுக்காரர் வந்திருக்கிறாரா என கேள்வி எழுப்பி அமரவைத்தார். ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்பது தானே என்று கூறிய மூதாட்டி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவித்தார்.