சாலையை மறித்து தடுப்புகள் வைத்த தவெகவினர்- எச்சரித்த காவலர்கள்

 
ன்

தவெக இரண்டாம் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ள விடுதியின் எதிரே போடப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றி வரும் போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழா நடைபெற உள்ள நட்சத்திர விடுதியின் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் தமிழக வெற்றி கழகத்தினர் இரும்பு தடுப்புகளை அமைத்து வருகின்றனர். சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க கூடாது எனவும், இங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டுமென தமிழக வெற்றி கழகத்தினரிடம் காவல்துறையினர் கூறி வருகின்றனர். 

காவல்துறையினரும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நட்சத்திர விடுதியின் எதிரே சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெற உள்ள நட்சத்திர விடுதி எதிரே பரபரப்பு நிலவி வருகிறது.