யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை!!

 
tn

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

1

இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்காத நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லிக்கு தப்பி சென்றார்.  கடந்த 10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டு-ஐ கைது செய்தனர். அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

tn

இந்நிலையில் சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆய்வாளர் தலைமையிலான இரண்டு காவலர்கள் என மொத்தம் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையிட சென்ற போலீசாருக்கு அனுமதி மறுத்து பெலிக்ஸின் மனைவி ஜேன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.