ஓபிஎஸ் ஆதரவாளர்களை தாக்க முயன்ற சம்பவம் - எடப்பாடி பழனிசாமி மீது போலீசில் புகார்

 
ep

ஓபிஎஸ் ஆதரவாளர்களை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், கிருஷ்ணன் பிரபாகரன்,மனோஜ் பாண்டியன்,மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி நகர செயலாளர் முருகன், தலைமையிலான அதிமுகவினர் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்குள் புகுந்து ரகளை செய்ய முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார். அதன் பிறகு ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்த நிலையிலும், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையிலான 50க்கும் மேற்பட்டவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு வெளியேறிய பெங்களூரு புகழேந்தி தாக்க முற்பட்டதோடு தகாத வார்த்தைகளால் வசை பாடினார்கள். அப்போது கார் கண்ணாடி உயர்த்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெங்களூர் புகழேந்தி அங்கிருந்து சென்றார். 

இந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி உள்ளிட்டோரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் 30 பேர் மீது ஓபிஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.