கள்ளக்குறிச்சியில் பா.ம.க அக்னி கலசம் சின்னம் சிதைப்பு! – ராமதாஸ் கண்டனம்

 

கள்ளக்குறிச்சியில் பா.ம.க அக்னி கலசம் சின்னம் சிதைப்பு! – ராமதாஸ் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ம.க கொடி கம்ப மேடை, அக்னி கலசம் மற்றும் சிங்கத்தின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிலையை அவமரியாதை செய்தல், மதம் தொடர்பான தவறான தகவலைப் பரப்புதல் என்று சாதி, மத மோதலை கொண்டுவர சில சக்திகள்

கள்ளக்குறிச்சியில் பா.ம.க அக்னி கலசம் சின்னம் சிதைப்பு! – ராமதாஸ் கண்டனம்

தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. கறுப்பர் கூட்டத்தைத் தொடர்ந்து கோவை, கள்ளக்குறிச்சியில் பெரியார் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன. தற்போது கள்ளக்குறிச்சியில் பா.ம.க-வின் கொடி மர மேடை, அக்னி கலசம் மற்றும் சிங்க சின்னத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

http://


இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்ப மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும், சிங்கம் சிலையையும் சமூக விரோதிகள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். கோழைத்தனமான இந்த ஈனச் செயல் கண்டிக்கத்தக்கது!

http://


கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின்

கள்ளக்குறிச்சியில் பா.ம.க அக்னி கலசம் சின்னம் சிதைப்பு! – ராமதாஸ் கண்டனம்

வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னி கலசம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்!
மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.