மகாத்மா காந்தியை நினைவு கூறுவோம்! நாட்டைக் காப்போம்! - ஜி.கே.மணி

 
gk mani

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். 
 
அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம். அவர் கண்ட கனவை நனவாக்குவோம்.   மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்று போராடி பெற்ற சுதந்திரத்தால் நாம் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது நாடு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல்வேறு நிலைகளில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு இணையாக வன்முறை, தீவிரவாதம், தீய சக்தியும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றை அகற்ற வேண்டும். எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. 


இன்னும் வறுமை ஒழியவில்லை. இது என் நாடு, எந்நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், எந்நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு, சேவை நோக்கோடு அர்ப்பணிப்புடன், நாட்டுப்பற்றுடன் பணியாற்றுவோம். காந்தியடிகள் கண்ட கனவை நனவாக்க வளத்தை பெருக்க, வலிமையை உருவாக்க உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.