தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர்!
பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி மற்றும் அரவிந்த் மோடி, அவர்களில் நரேந்திர மோடி மூன்றாவது மூத்தவர்.
சோமாபாய் மோடி ஒரு ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி ஆவார், அவர் இப்போது அகமதாபாத் நகரில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். நியாய விலைக் கடை உரிமையாளர்கள் சார்பாகச் செயல்படும் அவரது மற்றொரு சகோதரர் பிரஹலாத், அகமதாபாத்தில் சொந்தமாக நியாய விலைக் கடை வைத்துள்ளார். அவரது மூன்றாவது சகோதரர் பங்கஜ் காந்திநகரில் தகவல் துறையில் பணிபுரிகிறார்.பங்கஜ் மோடி உடன்பிறந்தவர்களில் இளையவர், குஜராத் தகவல் துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உடன்பிறந்த சகோதரரான பிரகலாத் மோடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மகா வராகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழகத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இக்கோவிலுக்குச் சென்று உலக நன்மைக்காகவும், தனது குடும்பத்தினரின் நலனுக்காகவும் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்து வழிபட்டார்.
பிரதமரின் சகோதரர் வருகையையொட்டி பரமக்குடி வராகி அம்மன் ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் தரப்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எளிய முறையில் சாமி தரிசனம் செய்த பிரகலாத் மோடியைக் காண்பதற்காகப் பொதுமக்களும், பாஜகவினரும் கோவில் வளாகத்தில் திரண்டனர். தனது தமிழகப் பயணம் குறித்தும், இங்குள்ள ஆன்மிகத் தலங்களின் சிறப்பு குறித்தும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

