ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

 
1 1

ராஜேந்​திரசோழன் பிறந்தநாளை இந்த ஆண்டில் மத்​திய கலாச்​சார துறை சார்​பில் 5 நாள் விழா​வாக கொண்​டாட மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. அதன்​படி, ராஜேந்​திர சோழன் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி, விழாவை மத்​திய கலாச்​சா​ரத்துறை அமைச்​சர் கஜேந்​திரசிங் ஷெகாவத் தொடங்​கிவைக்​கிறார். நிறைவு நாளான ஜூலை 27-ம் தேதி நடை​பெறும் திரு​வாசகம் மாநாட்​டில், பிரதமர் மோடி பங்​கேற்க உள்​ள​தாக​வும், அவர் கங்​கை​கொண்ட சோழபுரம் கோயில் பொறிக்​கப்​பட்ட நினைவு நாண​யத்தை வெளி​யிட உள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்த நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லினும் பங்​கேற்க வாய்ப்பு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதையொட்டி, வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் இருந்து கேரளாசெல்​லும் பிரதமர் மோடி, திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் பங்கேற்கிறார். அன்று இரவு திரு​வனந்​த​புரத்​தில் இருந்து திருச்​சிக்கு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. 27-ம் தேதி அரியலூர் மாவட்​டம் கங்கை கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். தொடர்ந்​து, 28-ம் தேதி பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளி​லும் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தாக​ தகவல்​வெளி​யாகி உள்​ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பாது​காப்​புக்​கான முன்​னேற்​பாடு​கள் தொடங்​கியுள்​ளன. விழா ஏற்​பாடு​களை மத்​தி​ய, மாநில அரசு அதிகாரிகள் மேற்​கொண்​டு வருகின்​றனர்​.