ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

 
modi

ராமேஸ்வரம் சென்றுள்ள பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 04.50 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.இதனை தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி மூலவரை தரிசனம் செய்தார். முன்னதாக ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். 

modi

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற பஜனையிலும் பங்கேற்றார்.