விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி

 
ffff

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார்  பிரதமர் மோடி.

tt

மக்களவைத் தேர்தல் ஏழாம்  கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை இறுதி கட்ட கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . இந்த சூழலில் 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கொடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்திற்கு தியானத்தை மேற்கொள்கிறார்.  இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை வருகை புரிந்தார்.  இதை தொடர்ந்து மாலை 5:40 மணியளவில் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.  அங்கு சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார்.

ttt

 பிரதமரின் வருகை ஓட்டி சுற்றிலும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது.  விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் தியான மண்டபத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர்,  சாரதா தேவி ஆகியோரில் சன்னிதிகளிலும் , சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கும் மலர் தூவி   மரியாதை செலுத்தினார்.  இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார் .  5 மணி நேரம் தியானம் அதன் பிறகு சிறிது ஓய்வு என மேற்கொண்ட பிரதமர் மோடி நாளை மாலைவரை  45 மணி நேரத்திற்கு தொடர் தியானத்தை மேற்கொள்ளயிருக்கிறார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுக்கும் ஓய்வை தவிர பிரதமர் தூங்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஓய்வு சமயத்தில் இளநீர்,  பழச்சாறு மட்டும் அருந்துகிறார்.  நாளை மாலை 4 மணியளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் படகுமூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.