ஸ்ரீகாகுள கோயிலில் கூட்ட நெரிசல் 9 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்..!
ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் ஏகாதசி மற்றும் சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்திருந்தனர்.அப்போது சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாவது;
"ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோவில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


