சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் : டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..

 
சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் : டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது .  

16-வது ஐ.பி.எல். சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி  தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. அந்தவகையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள்குஜராத் டைட்டன்ஸ்  முதல் ஆளாக  நுழைந்துள்ளது. பொதுவாக  புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகளே  ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதில்  முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் மோதும் போட்டி வருகிற  23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

CSK

முதல் ப்ளே ஆஃப் போட்டியில்  எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். அதேபோல 3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் விளையாடும் போட்டியும்  24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்திலேயே  நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 2 ப்ளே ஆஃப் சுற்று ஆட்டங்களும்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது  ரசிகர்களிடையே  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள்  நேரடியாக கவுன்டர் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டன.

சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் : டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..

ஆனால் ப்ளே ஆஃப் சுற்று  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த லீக் ஆட்டங்களின்போது டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.  இந்த முறை ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறும் என அறிவித்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது