மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 
fisher

நாகை, கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி  இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். 

fisher

நாகப்பட்டினம் செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

fishermen
மீனவர்களின் படகை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி , ரூ.5 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை  பறித்துள்ளனர். தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த  மீனவர் முருகன் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.