சிறையில் சவுக்கு சங்கர் - காவல்துறையின் அடுத்த மூவ்!!

 
tn

சவுக்கு சங்கரை 5 போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

tn

யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் , காவலர்கள் குறித்தும் அவதூறாக கருத்தை தெரிவித்த காரணத்தினால் கோவை சைபர் கிரைம் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் . தேனி விடுதி  ஒன்றில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கரை போலீசார் அதிரடியாக கைது செய்து , கோவை அழைத்து வந்தனர்.  கோவை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.

tn

இந்நிலையில் யூ டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு அளித்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல்செய்துள்ளனர். .