மெக்கானிக்கல் யானை பரிசாக வழங்கியது பீட்டா..!

 
1

பெரிய அளவிலான மெக்கானிக்கல் யானை ஒன்றை திருவனந்தபுர பௌர்ணமிகா கோவிலுக்கு பீட்டா  அமைப்பு பரிசாக அளித்துள்ளது.

இந்த மெக்கானிக்கல் யானைக்கு பாலதாசன் என்று பீட்டா இந்தியா அமைப்பு பெயர் வைத்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யானைக்கு பதில் இந்த மெக்கானிக்கல் யானையை பயன்படுத்தலாம் என்பதற்காக தான் இந்த பீட்டா இந்தியா அமைப்பு இதை பரிசாக அளித்துள்ளது.

உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் பீட்டா இந்திய அமைப்பு  இறங்கியுள்ளது.இது கேரளாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மெக்கானிக்கல் யானையாகும். 

இந்த யானை 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்டது. திருச்சூரில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளை  கிருஷ்ணர் கோவில் மற்றும் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலிலும் ஏற்கனவே மெக்கானிக்கல் யானைகளை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.