வேளாங்கண்ணியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி!

 

வேளாங்கண்ணியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வேளாங்கண்ணியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு வேளாங்கண்ணியில் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

வேளாங்கண்ணியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி!

இந்நிலையில் நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் ஆரோக்கிய மாதாவை வழிபட்டு வந்த நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.