பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு!

 
ttn

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று 6ஆவது முறையாக பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று மற்றும் உடல்நல குறைபாட்டினால் பரோலில் வந்தார்.

 Perarivalan
கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பேரறிவாளன்,  அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.  மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி ,விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு சென்று பேரறிவாளன் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

tn govt

மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு கூடுதலாக பரோல் தேவைப்படுவதாக ஒவ்வொரு முறையும் அவரது தாய்  அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அந்தவகையில் ஐந்து முறை பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டது. 

tn

இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவரது தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று ,தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலில் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.