கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

 

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அழைத்து செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் பரோலில் வந்துள்ளார். கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் அண்மையில் பரோலில் வந்தார். பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார். தற்போது நரம்பியல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

முன்னதாக தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்தது. அத்துடன், பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.