விஜய் தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைக்கு இந்தியாவிலேயே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் காவிரியில் 32 டி.எம்.சி.தண்ணீரை கர்நாடகா ஜூலை மாதத்திற்காக திறந்து விட வேண்டும் ஆனால் தண்ணீரை திறந்து விடாத காரணத்தால், மேகதாது அணைக்கட்ட ஆயத்தம் ஆரம்பித்திருக்கிற காரணத்தால், டெல்டா பகுதியில் கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதனால் ஆழ்ந்த துக்கத்திலே கவலையிலே டெல்டா மாவட்ட விவசாயிகள்இருக்கிறார்கள் .
முல்லைப் பெரியாறில் புதிய அணையை கட்டுவது தொடர்பாக புதிதாக பொறுப்பு ஏற்றுஇருக்கிற கேரளா அரசு தமிழக அரசோடு முரண்பட்டு நிற்கிறது இதனால் ஆழ்ந்த துக்கத்திலே கவலையிலே தென் மாவட்ட விவசாயிகள் உள்ளார்கள் இதற்கெல்லாம் தீர்வு காண அரசுக்கு கடமை காத்துக் கொண்டுள்ளது.அதோடு சட்டம் ஒழுங்கு காப்பாற்ற வேண்டிய கடமையும்,இரண்டு மாதங்களில் பெண் குழந்தைகள் பாலியல் சம்பவங்கள் அத்துமீறி போய்க்கொண்டிருப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது த.வெ.க அரசு.
பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்த மக்களுக்கு தலையில் பேரிடியாக இன்றைக்கு த.வெ.க அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட இன்றைக்கு தமிழக நலனுக்காக கடந்த 52 ஆண்டு காலமாக அயராது உழைத்து வருகின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்களிடத்தில் இருந்து தனிமைப்படுத்தும் சூத்திரத்தை மட்டும் அரகேற்றி வருகிறார்கள்.
சாமானிய பொதுச் செயலாளராக மக்கள் பணியாற்றி வருகிற எடப்பாடியாரை எப்படியாவது மக்கள் பணியில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று ரகசிய திட்டத்தின் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தொடர் ராஜினாமா செய்ய வைத்து இன்றைக்கு குதிரை பேரத்தில் தன்னுடைய அரசின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார்கள்..இதை நான் இட்டுக்கட்டியோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சி துளியும் இல்லாமல் சொல்கிறேன்
தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைக்க த.வெ.க வேண்டிய பெரும்பான்மையை நிரூபிக்க வீரமணியை நேரில் சந்தித்ததை தொடர்ந்து எதிரி என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலினை நேரிலே சந்தித்து, தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரிலே சென்று பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து , இதுவரை பார்த்து விடாத அன்பையும் பாசத்தையும் பூமழை பொழிகிற வகையிலே விஜய் அன்பை பரிமாறிக் கொண்டதை இந்த நாடு பார்த்தது.
அது அதோடு அமைச்சர் பதவிக்கு ஆசை காட்டி அதிமுக குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதோடு, கழகத்தின் பொதுச்செயலாளரை சந்திக்காமலே அரசியல் மரபுகளை மீறி சட்ட திட்ட விதிகளில் மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சில பேரை மட்டும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சந்தித்தது அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் என்று விஜய் கூறி பரபரப்பான செய்தியை நினைக்கிற போது ஆடு பகை,குட்டி உறவு என்கிற பழமொழி தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
தொடர்ந்து அவருடைய அரசியல் சித்து விளையாட்டுகள் எடுபடவில்லை .அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும், இனி எடப்பாடியார்வுடன்இனி ஒன்றாக இணைந்து மக்கள் பணியை தொடர போகிறோம் என்ற முடிவை எடுத்த போது அதிர்ந்து போல விஜய், அதிரடியாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தூக்கி ராஜினாமா என்ற அரங்கேற்றம் செய்தார். இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் 12 பேர்கள் வரை ஆட்டத்தை தொடர்வார் என செய்திகள் வெளி வருகிறது. தேர்தல் நேரத்திலே மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அல்லு,சில்லுகள் என்று ஆணவத்தின் உச்சியிலே அதிமுகவை விஜய் விமர்சித்ததை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.அண்ணா திமுக முன்னேற்றக் கழகத்தை தமிழ் நாட்டு மக்களிடத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கும் , எடப்பாடியாரை எப்படியாவது தனிமைப்படுத்த வேண்டும் என்ற விஜய்யின் ரகசிய திட்டம் தான் என்ன என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை.
ஒருவேளை எடப்பாடியாருக்கும், விஜய்க்கும் மாமன் மச்சான் சண்டையை தகராறு இருக்கிறதா? அப்படியும் ஒன்றுமில்லை. ஒருவேளை எடப்பாடியாருக்கும், விஜய்க்கும் வாய்க்கால் ,வரப்பு தகராறு ஏதாவது இருக்கிறதா அப்படியும் ஒன்றும் இல்லை .அப்புறம் ஏன் அதிமுக மீதும், எடப்பாடியார் மீதும் விஜய்க்கு அவ்வளவு வன்மம் என்று நாட்டு மக்களுக்கு தெரியவில்லை
ஒன்று மட்டும் புரிகிறது ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எந்த அரசியல் பின்புலம் இல்லாமல், எந்தவித சினிமா வசீகரம் இல்லாமல், தன்னுடைய அர்ப்பணிப்பினால் அயராது உழைப்பால் தமிழக அரசியலில் யாரும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக எடப்பாடியார் உள்ளார்.பல்வேறு சூதுகள், சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், துரோகங்கள் தாண்டி வலிமையோடு அதிமுகவை வழிநடத்தி வருகின்றார் அதனால் தான் எடப்பாடியாருக்கும் ,விஜய்க்கும் தகராறுஇது வாய்க்கால் வரப்பு தகராறு இல்லவே இல்லை என்பது தான் நமக்கு புரிகிறது.
ஆகவே அதிமுகவை தனிமைப்படுத்தி விட்டால் த.வெ.க கட்சியை தேசிய அளவிலே வளர்த்து விடலாம் என்று எடப்பாடியாரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால், காலம் இப்படியே போய்விடாது காலம் மாறும் காலம் மாறுகிறபோது அரசியல் கடும் பின்னடைவுகளை விஜய் சந்திக்கிற தீர்ப்புகளும் வரும்.விஜய் ஒன்றும் அவதார புருஷனும் அல்ல, தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளும் அல்ல காலம் தந்த தீர்ப்பிலே அவருக்கு முதலமைச்சர் அரியாசனம் கிடைத்திருந்தாலும் தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

