மக்களே இனி மாதம் ரூ.79 கட்டணும்..! இந்தியாவில் வாட்ஸ் அப் ப்ளஸ் சந்தா சேவை அறிமுகம்..!!
WhatsApp பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மேற்கத்திய நாடுகளில் பிரீமியம் மெசஞ்சர் சேவையை வழங்கி வரும் மெட்டா, அச்சேவையை தற்போது இந்தியாவிலும் களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில் ‘இந்தியாவில் வாட்ஸ் அப் ப்ளஸ் சந்தா சேவையை மாதம் ரூ.79 கட்டணத்தில் பயன்படுத்தலாம்’ என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையை முதல் மாதம் இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப App Icon-களை மாற்றுவது, கூடுதல் Pinned Chats வசதி உள்ளிட்ட பல பிரத்யேக அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பிளஸ் என்பது ஒரு செயல்பாட்டு மாற்றத்தை விட, அடிப்படையில் ஒரு தனிப்பயனாக்கத் தொகுப்பாகும். சந்தாதாரர்கள், செயலியின் தோற்றத்தை மாற்றுவதற்காக 18 புதிய வண்ணத் தீம்களையும், 14 புதிய செயலி ஐகான் வடிவமைப்புகளையும் பெறுகிறார்கள்.
காட்சி அம்சங்களைத் தாண்டி, இந்தத் திட்டம் சந்தாதாரர் அல்லாதவர்களுக்குக் கிடைக்காத பிரத்யேக ரிங்டோன்கள் மற்றும் புதிய ஸ்டிக்கர் பேக்குகள் உட்பட சில நடைமுறை கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது. ஒரு பயனுள்ள மாற்றம் என்னவென்றால், அரட்டைகளுக்கான பின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது; முந்தைய வரம்பிலிருந்து உயர்த்தப்பட்டு, பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் 20 அரட்டைகள் வரை பின் செய்யலாம்.
இந்த பிரீமியம் சேவை விருப்பத்திற்குரியது மட்டுமே. சாதாரண வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வழக்கம் போல் இலவசமாகவே செயல்படும்.முதல் மாதம் இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சேவையில், APP ICONS-ஐ பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் வசதி, EXTRA PINNED CHATS உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இச்சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது?
1.வாட்ஸ்அப் [Settings] பகுதிக்குச் செல்லவும்.
2.[Subscriptions] என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.[WhatsApp Plus] விருப்பத்தைத் தேர்வு செய்து, [Continue] கொடுக்கவும்.
4.கட்டணத்தை உறுதி செய்து சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

