மக்கள் அதிர்ச்சி..! இந்தியாவில் மட்டும் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

 
1

இந்தியாவில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 25 வரை, 1,84,241 கணக்குகளை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அனுமதியின்றி பகிரப்படும் நிர்வாணப் படங்கள் போன்றவற்றைப் பதிவிட்டக் கணக்குகளை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1303 கணக்குகளை நீக்கியுள்ளது எக்ஸ் நிறுவனம்.

மொத்தமாக, 185,544 கணக்குகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ள எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் 2021-ம் ஆண்டின், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியப் பயனர்களிடமிருந்து 18,562 புகார்களை, தமது குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கூடுதலாக, மேல்முறையீடு செய்த 118 பயனர்களின் கணக்குகளை இடைநீக்கம் செய்யாமல் பரிசீலித்துள்ளது.

‘4 கணக்குகளை, அதன் நிலைமைகேற்ப மறு ஆய்வு செய்து இடைநீக்கத்தை ரத்து செய்தோம். மீதமுள்ள கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஒரு மாத காலத்தில் கணக்குகள் குறித்த பொதுவான கேள்விகள், 105 பயனாளர்களின் கோரிக்கைகள் மூலம் கேட்கப்பட்டுள்ளன’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் பெரும்பாலான புகார்களாக, கணக்குகள் மீதான தடை நீக்கம் (7,555), வெறுப்புப் பிரசாரம் (3,353), வயது வந்தோருக்கானப் பதிவுகள் (3,335), அவதூறு/வன்கொடுமை (2,402) போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரை, எக்ஸ் தளம் 2,12,627 கணக்குகளையும், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1,235 கணக்குகளையும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.