சிறப்பு பொது விநியோகத்திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி..

 
ரேஷன் கடை


தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை   மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும்  பருப்பு, அரிசி, பாமாயில், கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.  இதனால் சிறப்பு விநியோகத் திட்டம் காலாவதியாகும்போதும் , ஒவ்வொரு  ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்டம்

அதன்படி கடந்த 2021 மார்ச் மாதம் நீட்டிக்கப்பட்ட சிறப்பு விநியோகத் திட்டம்  2021 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த திட்டத்தின் கிழ் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும், எனவே சிறப்பு பொது விநியோகத்திட்டத்தை  நீட்டிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆணையாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

குடும்ப அட்டை

இதனையடுத்து  அவரது கோரிக்கையை ஏற்று  தமிழக அரசு  சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து  உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.