செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை - மின்சார ரயில் தாமதத்தால் பயணிகள் அவதி

 
train

சென்னையில் பொது மக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது இதில் தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

train

இந்நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ரயில்கள் தாமதமாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

train

 ரயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக் கூடியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற குறைகளை சரி செய்யவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.