கொட­நாடு என்று சொன்­னாலே பழனிசாமிக்கு 'கொல நடுக்­கம்’ ஏற்­ப­டு­கி­றது - முரசொலி விமர்சனம்!!

 
tn

கொட­நாடு என்று சொன்­னாலே ‘கொல நடுக்­கம்’ ஏற்­ப­டு­கி­றது அதி­க­மா­கப் பத­று­கி­றார் பழனிசாமி  என்று முரசொலி செய்தி  வெளியிட்டுள்ளது.

'கொடநாடு' என்று சொன்னாலே 'கொல நடுக்கம்' ஏற்படுகிறது பழனிசாமிக்கு. அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி. எதற்காக அவர் பதற் வேண்டும்? 'எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் தயார்' என்று என்றாவது சி.பி.சி.ஐ.டி. வாசலுக்கு அவர் வந்திருந்தால் அவரை நம்பலாம். ஆனால், நிறுவனர் : கலைஞர் மு. கருணாநிதி அவரது பதற்றமே அவர் மீதான சந்- தேகத்தை அதிகப்படுத்துகிறது.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்- ணன் தனபால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் பழனிசாமியின் பிபி எகிறுகிறது. “கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். கொடநாட்டில் இருந்து 5 பைகள் நிறைய ஆவணங்களை எனது தம்பி கனகராஜ் கொண்டு வந்தார். பெருந்துறையில் வைத்து அதனை என்னிடம் காண்பித்தார். அதில், 3 பை சங்ககிரிக்கும், 2 பை சேலத்திற்கும் எனது தம்பி எடுத்துச் சென்று கொடுத்தார். அப்- போது சயானும் உடனிருந்தார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எனது தம்பி செய்தார். ஆனால் எனது தம்பியை பலிகடாவாக்கி விட்டனர். தற்போது எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கேட்கி- றார் கனகராஜின் அண்ணன் தனபால். இவர் சொல்வது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. பழனிசாமிக்குத்தான் தெரியும். அவர்தான் முழு உண்மையைச் சொல்ல வேண்டும்.

eps

ஆனால் பழனிசாமி அந்த உண்மையைச் சொல்லவில்லை. ‘கனக ராஜுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொடநாடு வீட்டுக்குள் அவரை நான் அனுப்ப- வில்லை. கனகராஜ் எந்தப் பையையும் கொண்டு வந்து என்னிடம் தரவில்லை. இதை எந்த இடத்திலும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்' என்றல்லவா பழனிசாமி சொல்லி இருக்க வேண்டும். அதைச் சொல்லவில்லை பழனிசாமி. ‘கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவர் அல்ல, சசிகலாவின் டிரைவர்தான்' என்று விளக்கம் அளித்துள்ளார். கனகராஜ், யார் காரை ஓட்டினார் என்ப- தல்ல பிரச்சினை. “கனகராஜை, ஜெயலலிதாவின் கார் டிரைவர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவுக்கு கார் டிரைவராக இருந்தவர். கனகராஜை, ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று இனி யாராவது சொன்னால் நீதி- மன்றத்தில் வழக்கு தொடர்வோம். கொடநாடு பற்றி யாரும் பேசக் கூடாது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது”- இதுதான் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் வைத்து பழனிசாமி கொடுத்த பேட்டி ஆகும். கனகராஜ், யாருக்கு கார் டிரைவராக இருந்தார் என்பதல்ல பிரச்- சினை. கனகராஜை ஏவியது யார் என்பதுதான் கேள்வி. *கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அன்றைய தினமே ஒம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.

tn
*அடுத்த ஐந்தாவது நாள் - அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி சந்தனகிரி புறவ- ழிச்சாலை - தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் மர்மமான முறையில் கனகராஜ் இறந்து கிடந்தார். இரு- சக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மீது கார் மோதிய- தாக அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. 'இது விபத்து அல்ல, என் சகோதரர் மரணத்தில் மர்மம்  என்று கனகராஜின் சகோதரர் தனபால் அன்று முதல் சொல்லி வருகிறார்.
*கனகராஜ் சொல்லி இந்தச் சம்பவத்தைச் செய்த சயான் மீது இதேபோல் மர்மமான கார் மோதுகிறது. அதில் சம்- பவ இடத்திலேயே சயானின் மனைவியும், மகளும் மர- ணம் அடைகிறார்கள்.

*கொடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வியை கையாளும் தினேஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் தற்- கொலை செய்து கொள்கிறார். - இந்த வகையில் ஒரு கொள்ளை - ஒரு கொலை - மூன்று மர்ம மரணங்கள் -- ஒரு தற்கொலை ஆகியவை நடந்த மர்மமான வழக்கு இது. பழனிசாமி ஆட்சி செய்தபோது தான் இது நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் சிலரை கைது செய்து கணக்குக் காட்டி முடிக்கப் பார்த்தார்கள். தி.மு.க. ஆட்சி மாறியதும், வழக்கின் விசாரணை உண்மையாக நடக்கத் தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களே, 'நாங்கள் இன்னும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்'  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.