திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளிய பழனி முருகன் சிலை- பக்தர்கள் ஆச்சர்யம்

 
ச்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் புது வருட பிறப்பை முன்னிட்டு தை மாத பிறப்பை முன்னிட்டும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் கடல் உள்வாங்குவதன் காரணமாகவும் கடலுக்குள் இருக்கும் கல் சிலைகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் அய்யா கோவில் பின்புறம் கடற்கரை ஓரமாக பாதயாத்திரை ஆக வரக்கூடிய பக்தர்கள் அவர்கள் மினி ஆட்டோ  லோடு ஆட்டோ போன்ற வாகனத்தில் முருகன், பழனி ஆண்டவர், வெண்கல சிலை, மரத்தினால் செய்யப்பட்ட சிலை, வாகனத்தில் வைத்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவது வழக்கம். அவர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். மரங்களால் செய்யப்பட்ட சிலை சேதமடைந்து விட்டால் அந்த சிலைகளை கடற்கரையில் விட்டு விட்டு சென்று விடுவார்கள், அப்படி விட்டு விட்டு சென்ற சிலை தான் மரத்தினால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சிலையின் கை பகுதி சேதம் அடைந்துள்ளது. 

சுமார் ஒரு வாரமாக அந்த சிலையானது அந்த கடல் பகுதியில் இருப்பதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் அந்த சிலையின் அருகில் போய் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் சமூக அலுவலர்கள் இந்த மாதிரி கடவுள் சிலைகளை பாதுகாத்து வரும்படி கோவில் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட்  சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக காணப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சார்பாக இந்த கடவுள்கள் சிலைகளை எல்லாம் தனியாக ஒரு இடத்தில்  பாதுகாத்து வைக்க வேண்டும் என்று கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோரிக்கை.