விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் - மத்திய அரசுக்கு ஓபிஎஸ் நன்றி!!
![n](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e6918a5b2a58b069255f49434c94900c.jpg)
மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது அறிவித்திருப்பதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 27, 2024
இதேபோன்று, பத்ம விபூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி வைஜயந்திமாலா பாலி, திருமதி பத்மா…
இதேபோன்று, பத்ம விபூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி வைஜயந்திமாலா பாலி, திருமதி பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள வள்ளி ஒயில் கும்மி ஆட்ட கலைஞர் திரு. பத்திரப்பன், குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் திரு. ஜோடி குரூஸ், மருத்துவர் நாச்சியார், நாதஸ்வர இசைக் கலைஞர் திரு. சேஷம்பட்டி டி. சிவலிங்கம் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துகள்.என்று குறிப்பிட்டுள்ளார்.