தமிழ் மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவோம் - ஓபிஎஸ்

தமிழ் மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவோம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல ஏதுவாக, “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற குறிக்கோளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வண்ணம், “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற மாடலை உருவாக்க தமிழ்நாடு தினமான இன்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.…
— O Panneerselvam (@OfficeOfOPS) November 1, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல ஏதுவாக, “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற குறிக்கோளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வண்ணம், “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற மாடலை உருவாக்க தமிழ்நாடு தினமான இன்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த நாளில் தமிழ் மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவோம் என குறிப்பிட்டுள்ளார்.