“முதல்வரின் கனவு பலிக்காது”- ஓபிஎஸ் காட்டம்
Nov 14, 2025, 16:05 IST1763116550000
போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “பீகார் தேர்தலில் ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது. மேகதாது அணையை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தமிழக அரசு தனியாக தீவிரமாக ஆய்வு செய்யவில்லை. போடி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது” என்றார்.


