ஒரு முதல்வர் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ’ஹலோ சுகமா?’ எனக் கேட்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

 
ம்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Image

உடன் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முன்னதாக அண்ணாசாலையில்  300-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி அவரை வரவேற்க அருகில் சென்று அவரை வரவேற்றதால் சிறிது நேரம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஏழை, எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர் எம்ஜிஆர். அதற்காக தான் அதிமுக என்ற மாபெரும் கட்சியை தொடங்கினார். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம்தான் எங்களுக்கு உள்ளது, எங்களின் கோரிக்கையாகவும் உள்ளது. உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்பதை தெளிவு படுத்தி உள்ளோம். இந்த குழு ஆரம்பித்த முதல் அரசின் மெத்தனை போக்கை சுட்டி காட்டி மக்களின் மன்றத்தில் கொண்டு சென்று போராடி வருகிறோம்.


உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கூட்டணி போல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி செயல்படுகிறது, முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஹலோ எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார்? அதற்கும் இவரும் சிரித்து நன்றாக இருக்கிறேன்... என்று சொல்கிறார். உலகத்திலேயே பிரிந்த சக்திகள் இணைய கூடாது என்று சொல்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான். நாங்கள் இணையவேண்டுமென கூறிவருகிறோம். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த முடிவுக்கு நாங்கள் வருவோம்” என்றார்.