ஆன்லைன் ரம்மி: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு!

 
high court


ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து  இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால்,  சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகப்பிரியா, 11 வயது மகன் தாரக்,  ஒன்றரை  வயது மகன்  ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.  கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சந்தேகம் மரணம் என்று சிபிசிஐடி போலீஸார் விசாரித்து  வந்த நிலையில், பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.   இது தொடர்பாக விசாரணைக்காக மணிகண்டனின் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் அவருக்கு கிடைத்த போனஸ்,  விளையாட்டின் மூலம் 3,28,000 ரூபாய்  சம்பதித்த விவரங்கள் வருமான வரி பிடித்தல் தொடர்பான விவரங்களை வழங்க கோரி மும்பையை சேர்ந்த கேம்ஸ்  24*7 நிறுவனத்திற்கு சிபிசிஐடி கடந்த மாதம் 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.  

Rummy

 இதேபோல சென்னை அண்ணா நகரை சேர்ந்த, ரகுவரன் மரணம்  தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.  இந்த இரு நோட்டீஸ்களையும் ரத்து செய்ய கோரி அந்த நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.  அந்த மனுக்களில் காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில்,  காவல்துறை உள்நோக்கத்தோடு பொத்தாம் பொதுவாக விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பணம் வைத்து விளையாடும் படி என்று வேண்டுமென்று யாரையும் வற்புறுத்தவில்லை என்றும்,  வெற்றி தோல்வியை  தீர்மானிப்பதில் தங்கள் பங்கு ஏதும் இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.  ரம்மி  தடை சட்டத்தை தடை செய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் விசாரணை என்கிற பெயரில் காவல்துறையை துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

நீதிமன்ற தீர்ப்பு

மேலும்,  2017 ஏப்ரலுக்கு பிறகு மணிகண்டன் தங்களது விளையாட்டை விளையாடவில்லை என்றும், 5  ஆண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று  நீதிபதி சந்திரசேகர் முன்பு என்ற விசாரணைக்கு வந்தது,  அப்போது விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவை ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார் மேலும்,  தமிழக அரசு,  டிஜிபி , சிபிசிஐடி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார்..