திருவாரூரில் ஓஎன்ஜிசி கிணறு நிரந்தரமாக மூடப்படும்- கிராமத்தினர் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் வளாகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு மூடுவதற்கான கண்காணிப்பு குழு கூட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஓஎன்ஜிசி நிர்வாக அதிகாரிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் பொதுச் செயலாளர் முகமது ரபிக் உள்ளிட்ட காரியமங்கலம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் இயற்கை எரிவாயு கச்சா எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிணறுகள் தோண்டும் பணி நடைபெற்றது. பணி நிறைவுறும் தருவாயில் 2013 ஏப்ரல் 6ம் தேதி கட்டுக்கடங்காத ஹைட்ரோ கார்பன் எரிவாயு வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தால் நள்ளிரவு 12 மணிக்கு தற்காலிகமாக அடைக்கப்பட்டது. ஆசியாவிலேயே அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு இங்கு உள்ளது. கச்சா எடுப்பதற்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து எதிர்பாராத நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு பீறிட்டு வெளியே தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதனை சுற்றி எட்டு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு அடர்த்தியை குறைத்து எரிவாயு வணிக நோக்கத்துடன் விற்பனைக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் (பி ஆர் பாண்டியன்) வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் கொள்கை பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக கூறி ஓஎன்ஜிசிக்கு தடையை நீக்குவதற்கு கோரினர். இதனை ஏற்று நீதிமன்றம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
தொடர்ந்து மூடுவதற்கு மறுத்து ஓஎன்ஜிசி நிர்வாகம் அவ்வபோது வணிக நோக்கோடு செயல்படுத்துவதற்கும் மறைமுகமாக நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தோம். கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று கிணறு மூடுவதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அனுமதி பெற்று கிணறு மூடுதல் கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு கிணறு மூடுவதற்கு கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி வளாகத்தில் இன்று நடைபெற்ற கண்காணிப்பு குழு 2வது கூட்டத்தில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு நாளை 21.01.2025 முதல் கனரக வாகனங்களை கொண்டு வந்து மூடும் பணியை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.7000 மீட்டர் அளவு வரையிலும் உள்ளே கிணறு மூடும் பணி முடிந்த பிறகு விளைநிலங்கள் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பு செய்யப்படும் என உறுதி அளித்தார். இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாபர் அலி லாரி விட்டு ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகள் காவல்துறையிடம் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். உடனடியாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர முன்வர வேண்டும் என தெரிவித்தார்.