இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை

 
murder

சிவகாசியில் இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder

சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையிலுள்ளது வடமலாபுரம் கிராமம்.  வடமலாபுரம் அண்ணா காலனியில் வசித்த மூதாட்டி லட்சுமி( வயது 70). இயற்கை உபாதைக்காக இரவு நேரத்தில் அருகிலுள்ள ஆட்கள் நடமாட்டமில்லாத முள் காட்டிற்குள் சென்றார். இரவு வெகு நேரமாகியும் மூதாட்டி வீடு லட்சுமி திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடினர்.   அவரை காணாத நிலையில், உறவினர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
 

இந்நிலையில் விடிந்தவுடன் காலை அருகிலுள்ள முள்காட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் மூதாட்டி லட்சுமி கண்டறியப்பட்டார். சம்பவம் குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மூதாட்டி லட்சுமியை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த காசி மாயன்( வயது 25) என்பவரை கைது செய்தனர்.
 

சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:- பெண்கள் இயற்கை உபாதைக்காக  ஒதுங்கும் பகுதியில்  காசிமாயன் ஒளிந்திருப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காசிமாயனை கைது செய்து விசாரித்தோம். மூதாட்டி லட்சுமி இயற்கை  உபாதைக்காக ஒதுங்கும்போது  அங்கு வந்த  காசிமாயன்  பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூதாட்டி லட்சுமி சத்தம் போடவும்  கயிற்றினால் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்துள்ளார் என்று தெரிவித்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் காசிமாயன் மீது பல்வேறு வழக்குகள் சிவகாசி வட்டார காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.