நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!

 
dmk

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல் பெரியார் குறித்த சீமானின் பேச்சு பிடிக்காமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.