பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகிய கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் சென்னை சென்று தலைமறைவானார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமானதாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். புகாரின் படி விசாரித்ததில் அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் கொலை செய்து உடலை வீசியது தெரிந்தது.
விசாரணையில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக் கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து வரிச்சியூர் செல்வம், உள்ளிட பலர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.