அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை- காவல்துறை

 
இத்தோட நிறுத்திக்கோங்க.. இல்லைனா நாங்களும்.. - ஜெயக்குமாரை எச்சரித்த அமர்பிரசாத் ரெட்டி..

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தை தொடர்ந்து அவரது மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Follow Amar Prasad Reddy (@amarprasadreddy) - Koo

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி போலீசார் கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாககக் கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை என்றும், போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால் , அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். 

Taking over as the State President for... - Amar Prasad Reddy | Facebook

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்கிற அச்சத்தில், முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என  அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, நிரோஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.