யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும்-தவெக
Jul 28, 2026, 19:31 IST1785247298719
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டதற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

