நிபா வைரஸ் பரவல் : இதெல்லாம் ரொம்ப முக்கியம்.. எச்சரிக்கும் தமிழக சுகாதாரத்துறை..

 
நிபா வைரஸ் பரவல் : இதெல்லாம் ரொம்ப முக்கியம்.. எச்சரிக்கும்  தமிழக சுகாதாரத்துறை..


நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  

நிபா வைரஸ் என்பது கொரோனாவை விட மிக மோசமானதாக கண்டறியப்படும் ஒரு விதமாக வைரஸ் காய்ச்சல். நிபா வைரஸ் முதன் முதலில் 1998ம் ஆண்டு மலேசியாவில் கண்டறியப்பட்டது.  இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் பரவுகிறது. இந்தியாவில் கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போதே  17 பேர் இந்த நிபா வைரஸால் உயிரிழந்தனர். 

பின்னர் கடந்த 2019, 2021 மற்றும் 2023  செம்படம்பரிலும் நிபா வைரஸ் பரவல் கேரளாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். ஆகையால் நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாரு:- 
 “◾️ காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

◾️ அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.

◾️ அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

◾️ பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.

◾️ ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

◾️ நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

◾️ காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

◾️ கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.