கடையநல்லூரில் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் என்ஐஏ அதிகாரிகள்

 
nia

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

tn

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள்  தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரசாலிபுரம் தெருவில் உள்ள இத்ரிஸ் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

NIA

இத்ரிஸ் செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து அழைப்பு வருவதாக தகவல் வெளியானது. தகவலின் அடிப்படையில் இத்ரிஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது.