ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட இடைக்காலத் தடை... - தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...

 
ஆரோவில்


புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது .

புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், விழுப்புரம் மாவட்டத்தில்  அமைந்துள்ளது ஆரோவில்.  ’அரவிந்தர் ஆசிரமம்’ மூலம் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது.  எங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தின் அனைத்து பணிகளும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.  அதன் தலைவர் பதவிக்காலம் கடந்த 2021 நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

ஆரோவில்

இதனையடுத்து புதிய தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி நியமிக்கப்பட்டார்.  மேலும்  நிர்வாகக் குழு உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் நிர்வாக குழு கூட்டம் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது.  இதனை அடுத்து ’கிரவுன்’ என்ற திட்டத்தின் கீழ் ஆரோவில் பகுதியில் சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் பணி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது.

ஆரோவில்

 இந்த திட்டத்தால் 25 ஆண்டுகளாக செயல்படும் யூத் செண்டர் பாதிக்கப்படும் எனவும்,  இயற்கையை அழித்து இத்திட்டத்தை துவங்க கூடாது என்றும்   ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இயற்கையை அழிக்கும் செயல் என அரசியல் தலைவர்கள் பலரும் கணடனம் தெரிவித்தனர்.
புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது . ஆரோவில் பகுதியில் அதிகளவில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது

பசுமை தீர்ப்பாயம்