10 தேசிய திரைப்பட விருதுகளை தமிழ் திரையுலகம் வென்று இருப்பது பெருமைக்குரிய ஒன்று- விஜய்

 
விஜய்

 

தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும். வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்துள்ள "ராயன்" திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், "கேப்டன் மில்லர்" திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த திரு. தனுஷ் அவர்களுக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், "அமரன்" திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது. திரு. ஆர். கலைவாணன் அவர்களுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "மகாராஜா" திரைப்படத்திற்காக அனல் அரசு அவர்களுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த செல்வி சாச்சனா நமிதாஸ் அவர்களுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், "மெய்யழகன்" திரைப்படத்திற்காக திரு. சுரேன் ஜி அவர்களுக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், "ப்ளூ" குறும்படத்திற்காக திரு. டி. எஸ். ஹரிஹா சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் சுதன் அவர்களுக்குச் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர, வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.