தேசிய பத்திரிக்கையாளர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து..

 
stalin

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  

National Press Day

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது வாழ்த்து செய்தியில், “அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம். அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்.  

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு" என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ், “கத்தி முனையை விட பேனா வலிமையானது. பேனா முனைகள் இல்லாமல் இந்திய ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 தூண்களுடன் இணைந்து ஜனநாயகத்தைக் காக்கும் நான்காவது தூண்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ramadoss

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்திய பிரஸ் கவுன்சில் 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாள் இன்று. தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்..
 
இதேபோல் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.