அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 4 பேர் உயிரிழப்பு

 
tn

மதுராந்தகம் அருகே தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி மற்றும் அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

tn

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றி லாரி ஒன்று வந்த நிலையில் அது பழுதாகி நின்று கொண்டிருந்தது.  அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் அதிவேகமாக மோதியது. அத்துடன்  முசிறியில் இருந்து கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்து மீது மோதியது அடுத்தடுத்து நிகழந்த விபத்துகளால் பயணம் செய்த மேல்மருவதூர்  சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் ,சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி, பிரவீன் மற்றும் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

death

 20க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர் . மீட்கப்பட்டவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .