அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை

 
Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைக்காததால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக தகவல் வெளியானது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

இந்த் அநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலை வலி, பித்தப்பை கல், காலில் உள்ள நரம்பு பிரச்சனை, வயிற்று வலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.