இயற்கை உபாதை கழிக்கச் சென்ற தாய், மகள் ரயில் மோதி பலி

 
death

சிவகாசியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற தாய், மகள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி மேற்கு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த  தமிழ்செல்வி (வயது 54),தனலட்சுமி (வயது 28)இருவரும் தாய்- மகள் ஆவார்கள். இவர்கள் இருவரும்  சிவகாசியிலிருந்து  திருவில்லிபுத்தூர் செல்லும் ரயில் பாதை காந்திநகர் ரயில்வே தண்டவாளத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இயற்கை உபாதைக்காக இருவரும் சென்ற நிலையில்,காது கேளாத வாய் பேச முடியாத தாயை காப்பாற்ற முயன்று மகளும் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். தாய், மகள்  இருவரின் உடலையும் கைப்பற்றிய திருவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் உடற்கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.